For Daily Alerts
Just In
டெல்லி குண்டுவெடிப்பு: சென்னை கைதிகள் உண்ணாவிரதம்
சென்னை:
டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு இந்து மதஅமைப்புகளைச் சேர்ந்த கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு இந்து மத அமைப்புகளைச் சேர்ந்த 35 தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக்கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
மாலை வரை அவர்களது உண்ணாவிரதம் நீடித்தது. குண்டு வெடிப்புக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் இந்தப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
Comments
Story first published: Monday, October 31, 2005, 5:30 [IST]