முதல்வர் ஆனார் குலாம் நபி ஆசாத்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக குலாம் நபி ஆசாத் பதவியேற்றார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுபதவியில் இருந்தது. முப்தி முகம்மது சயீத் முதல்வராக இருந்து வந்தார்.காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சிகளிடையிலான ஒப்பந்தப்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிமுதல்வர் பதவியை வகிக்க வேண்டும். அதற்கு வசதியாக சில நாட்களுக்கு முன்பு சயீத் பதவி விலகினார்.
இதையடுத்து சட்டசபை காங்கிரஸ் தலைவராக குலாம் நபி ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குலாம் நபி ஆசாத்தைஅரசமைக்க வருமாறு ஆளுநர் எஸ்.கே. சின்ஹா அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர், சர்வதேச மாநாட்டு மைய மண்டபத்தில் நடந்த எளிய விழாவில்குலாம் நபி ஆசாத் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அம்மாநிலத்தின் 10வது முதல்வராக குலாம் நிபி ஆசாத் பொறுப்பேற்றுள்ளார். ஆசாத்துடன் 5அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications