9 வட மாநில ரயில்கள் இன்று ஓடுகின்றன
சென்னை:
கன மழை காரணமாக கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த 9 வட மாநில ரயில்கள் இன்று முதல் ஓடத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் கன மழை தொடர்பாக விஜயவாடா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துமுற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.இதனால் சென்னையிலிருந்து செல்ல வேண்டிய பல வட மாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னைசென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் ஜி.டி எக்ஸ்பிரஸ், விஜயவாடா செல்லும் ஜன சதாப்திஎக்ஸ்பிரஸ், ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், காக்கிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டனம் எக்ஸ்பிரஸ்,
தான்பாத்-டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம்-ஹெளரா எக்ஸ்பிரஸ், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள்ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், விஜயவாடா மார்க்கத்தில் இரு ரயில் பாதைகள் சீர் செய்யப்பட்டு விட்டதால், சில ரயில்களைமட்டும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பினாகினி எக்ஸ்பிரஸ்-, சார்மினார் எக்ஸ்பிரஸ், அந்தமான் எக்ஸ்பிரஸ்,தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சென்னை-ஹெளரா மெயில், எழும்பூர்-திப்ரூகர் டவுன் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹெளராஎக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஸாபர்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கூடூர் வழியாக இயக்கப்படவுள்ளதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது.