குஷ்புவுக்கு தர்மபுரி கோர்ட் சம்மன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
![]() |
பாமக தொடர்ந்த வழக்கில் நடிகை குஷ்பு வருகிற 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தர்மபுரிகுற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெண்களின் கற்பு நிலை குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று கூறி தமிழகத்தில்பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவற்றில் பல நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்று ஒரு வழக்கு தர்மபுரிகுற்றவியல் நீதிமன்றத்தில் தெற்கு மாவட்ட பாமக பொருளாளர் ஜெயலட்சுமி தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை விசாரணைக்கு ஏற்று, வருகிற 18ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications