For Daily Alerts
Just In
மதுரையில் விஜயகாந்த் 3 நாள் காம்ப்
மதுரை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரான பிறகு நடிகர் விஜயகாந்த் முதல் முறையாக இன்று மதுரைவருகிறார்.
கடந்த செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடந்த ரசிகர் மன்ற மாநாட்டின் போது தேசிய முற்போக்கு திராவிடகழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.இந்த மாத கடைசியில் அவர் 3 மாத தமிழக கிராம சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதில் படு வேகமாக உள்ள விஜயகாந்த், இன்று மதுரை வருகிறார்.
கட்சித் தலைவரான பிறகு முதல் முறையாக அவர் மதுரை வருகிறார் என்பதால் பிரமாண்ட வரவேற்புக்கு கட்சித்தொண்டர்களும், ரசிகர்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.
3 நாள் மதுரையில் தங்கியிருக்கும் விஜயகாந்த் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் கட்சிப் பணிகள் தொடர்பாக கலந்தாலோசனை நடத்துகிறார்.
மதுரையில் தங்கியிருக்கும் நாட்களில் மதுரை, கோவை, நீலகிரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை அவர்சந்தித்துப் பேசுகிறார்.
Comments
Story first published: Friday, November 4, 2005, 5:30 [IST]