புலிகளுடன் சண்டை போட மாட்டேன்: ராஜபக்ஷே
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இனி மேல் சண்டை போடும் எண்ணம் இலங்கை அரசிடம் இல்லை என்று அந்நாட்டுபிரதமரும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான மகிந்திரா ராஜபக்ஷே கூறியுள்ளார்.
கொழும்பு அருகே உள்ள பலாலி ராணுவ விமான தளத்துக்குச் சென்ற ராஜபக்ஷே அங்கு பேசுகையில், நான்அதிபரானால் முதல் வேலையாக விடுதலைப் புலிகளுடன் சண்டை போடுவதை நிறுத்துவேன்.சண்டையுடன், அதிபராக நான் விரும்பவில்லை.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமூகமான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறேன். சண்டைபோடுவதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணம் எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இல்லை.
போரினால் அமைதி ஏற்படாது, மாறாக அழிவு தான் ஏற்படும். என்னால் முடிந்தை வரை அமைதி வழியில்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிப்பேன் என்றார் ராஜபக்ஷே.
இலங்கையில், வருகிற 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சிசார்பில் ராஜ பக்ஷேவும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவும்போட்டியிடுகிறார்கள்.
சமீபத்திய கருத்துக் கணிப்பில் விக்கிரமசிங் கேதான் அதிபர் தேர்தலில் வெல்வார் என தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக இதுவரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்து கொண்டிருந்த ராஜபக்ஷே பல்டிஅடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.