அன்னதானத் திட்டம் மேலும் 9 கோவில்களுக்கு நீட்டிப்பு
சென்னை:
தமிழக அரசின் திருக்கோவில் அன்னதானத் திட்டம் மேலும் 9 கோவில்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.தமிழக அரசின் சார்பில் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா சென்னையில் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 63 கோவில்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் 108 கோவில்கள்இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அன்னதானத் திட்டத்தில் இடம் பெற்ற கோவில்களின் எண்ணிக்கை 171 ஆகஅதிகரித்தது.
இந்த நிலையில் தற்போது மேலும் 9 கோவில்களுக்கு இத்திட்டத்தை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில், திருவிடந்தை நித்ய கல்யாணசுவாமி கோவில், பூவரசம்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில், உடுமலைப்பேட்டை மாரியம்மன்திருக்கோவில்,
ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில், ஐய்யர் மலைரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில், ஆழ்வார்திருநகரி ஆதி நாத ஆழ்வார் திருக்கோவில் ஆகிய கோவில்களிலும்அன்னதானத் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் இந்தத் திருக்கோவில்களிலும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம்அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்படும் கோவில்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications