மதுரை மேயரின் ஜாமீனை ரத்து செய்ய மனு
மதுரை:
பெண் கவுன்சிலரை காரில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றியபோது ஏற்பட்ட விபத்தில் அந்தப் பெண் பலியான வழக்கில் மதுரை திமுக மேயர் செ.ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த திருமணமான பெண் கவுன்சிலரான பாண்டீஸ்வரியுடன் நெருக்கமாக இருந்து வந்த மதுரை மேயர் ராமச்சந்திரன், அவரை தனது லான்சர் காரில் ஏற்றிக் கொண்டு கைலியுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.அப்போது ஏற்பட்ட விபத்தில் பாண்டீஸ்வரி பலியாகிவிட எஸ்கேப் ஆனார் மேயர். காரை ஓட்டியதாக கண்ணன் என்பவரை போலியாக சரணடைய வைத்தார்.
ஆனால் கண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேயர் ராமுவின் திருட்டுத்தனங்கள் வெளியில் வந்துவிட, இந்த வழக்கில் மேயரை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவருக்கு மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கினார்.
இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
மேயர் ராமச்சந்திரன் செல்வாக்கு மிக்க நபர். சாட்சிகளைக் கலைக்க அவர் முயற்சி செய்யக் கூடும். பொய் குற்றவாளியை சரணடைய வைத்ததன் மூலம் விசாரணையை திசை திருப்ப அவர் முயற்சி செய்துள்ளார். எனவே அவருக்குத் தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications