அத்வானி, வாஜ்பாய் மீது விஎச்பி மீண்டும் தாக்கு
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சி வாஜ்பாய், அத்வானி ஆகிய 2 பேரைச் சுற்றியே செயல்படுவதாக விஷ்வ இந்து பரிஷத்குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பரிஷத்தின் துணை தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் கூறியதாவது:சங்பரிவார் அமைப்புகளைக் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தக் குழுவின்முன்னிலையில் தான் பாஜகவின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இப்போது பாஜகவில் அத்வானி, வாஜ்பாய் இருவர் மட்டுமே முக்கிய முடிவு எடுப்பவர்களாக செயல்படுகிறார்கள்.வேறு யாரின் கருத்தையும் கேட்பது கிடையாது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஸன் சொன்னது போல் பாஜகவில் வாஜ்பாய், அத்வானியை சுற்றியே அனைத்தும்நடைபெறுகிறது. கட்சி உறுப்பினர்களை கலந்தாலோசித்து ஒருங்கிணைந்து முடிவெடுப்பது கிடையாது என்பதுஉண்மையாகிறது.
இந்த நடவடிக்கை கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும். ஒருங்கிணைந்த தலைமை இருந்தால் தான் கட்சி வளரும்.
கட்சியில் சர்வாதிகாரப் போக்கு இருக்கக் கூடாது. நாங்கள் அந்த சர்வாதிகாரப் போக்கை விரும்பவில்லை.
கிரிக்கெட் அணியில் கேப்டனின் முடிவிற்கு மற்ற வீரர்கள் கட்டுப்பட்டாலும், அந்த முடிவை கேப்டன் மற்றவீரர்களுடன் கலந்தாலோசித்தே வெளியிடுவார். கேப்டனே தனிச்சையாக முடிவு எடுப்பதில்லை. அது போல கட்சிதலைவரே முடிவை சொல்லட்டும் அதற்கு முன்பு கட்சி உறுப்பினர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றார்.