சுஹாசினியின் உருவப்படம் எரிப்பு

Subscribe to Oneindia Tamil

வந்தாசி:

நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை சுகாசினியின் உருவப்படம் சென்னை எழும்பூர் நீதிமன்றவளாகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடிகை குஷ்புவை ஆதரித்து நடிகை சுஹாசினி பேட்டி அளித்ததை கண்டித்து எழும்பூர்வளாகத்தில் அவரது உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், சென்னை ஐகோர்ட் வக்கீல் முத்துராமலிங்கம் என்பவர் சுஹாசினி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

பாமக, விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த மகளிர் வந்தவாசியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற சுஹாசிக்கு எதிராக திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு கையில் கறுப்புக் கொடி, துடைப்பம்ஆகியவற்றை ஏந்தியபடி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல் சுஹாசினியின் கருத்துக்கு நடிகர் சங்கம், கண்டனம் தெரிவித்திருந்தது. இதை செய்தித்தாளில் பார்த்தசுஹாசினி உடனே செல்போன் மூலம் நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமாருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார்.

அதில் நான் யார் என்று உங்களுக்கு தெரியாது. என் மீது நடவடிக்கை எடுத்தால் நடப்பதே வேறு, உங்களுக்குநோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுப்பேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதைப் பார்த்து சரத்குமார் அதிர்ச்சி அடைந்தார். சங்கத் தலைவர் விஜயகாந்த்துக்கு அது குறித்து தெரிவித்தார்.நடிகர் சங்கத்தை எதிர்த்து சுகாசினி என்ன நடவடிக்கை எடுப்பார் என்று பார்ப்போம் என்று விஜயகாந்த் கூறினார்.

சுஹாசினியின் இந்த மிரட்டல் நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருப்பதுடன்,திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+