For Daily Alerts
Just In
ஆஸ்திரேலிய அணு உலையை தாக்க சதி
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் அணு மின் நிலையத்தைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சிட்னிக்கு அருகே லூகாஸ் ஹைட்ஸ் என்ற இடத்தில் உள்ள இந்த அணு மின் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்காரில் வந்த முகம்மத் எலோமோர், அப்துல் ரகீப் ஹசன், மாசென் டெளமா ஆகிய 3 தீவிரவாதிகளை ஆஸ்திரேலிய போலீசார்கைது செய்தனர்.இவர்கள் தந்த விவரத்தின் அடிப்படையில் மேலும் 5 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அணு உலையைத் தாக்கி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சேதம் விளைவிக்க இவர்கள்திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இவர்களுக்கு கிழக்கு ஆஸ்திரேலியப் பகுதியில் உள்ள கிராமப் பகுதியில் ஜிகாத் பயிற்சி அளிக்கப்பட்டதாக போலீசார்கூறியுள்ளனர்.
அணு உலைக்குச் செல்லும் பாதைகளில் ஒரு பாதையின் கதவின் பூட்டையும் இவர்கள் உடைத்துள்ளனர்.
இந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 160டெட்டோனேட்டர்கள், வேதிப் பொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
Comments
Story first published: Monday, November 14, 2005, 5:30 [IST]