தலையில்லாமல் கூடும் சென்னை மாநகராட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேயரே இல்லாத நிலையில் துணை மேயர் கராத்தே தியாகராஜனும் தலைமறைவாக உள்ள நிலையில் வரும் 21ம் தேதி சென்னைமாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தக் கூட்டம் நடக்கும் தகவலை மாநகராட்சி ஆணையர் விஜய்குமார் அறிவித்துள்ளார். இவர் போட்டுக் கொடுத்துத் தான் தன்னைமேலிடம் போலீஸை விட்டு விரட்டி வருவதாக கராத்தே புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் மாநகராட்சி மன்றக் கூட்டம்நடப்பதை விஜய்குமாரே அறிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி தான் மாநகராட்சி கூடியது. அதுவரை போயஸ் கார்டனுக்கு வேண்டியவராக இருந்த கராத்தே தான்தலைமை தாங்கினார்.
இப்போது கூட்டம் நடக்கும் என ஆணையர் அறிவித்திருந்தாலும் யார் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கவில்லை. இதனால் கூடுதல்பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications