For Daily Alerts
Just In
குணசீலம் கோவிலில் ஜெயேந்திரர் பூஜை
திருச்சி:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் திருச்சி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி ஆலயத்தில் வழிபாடு செய்தார்.
முன்னதாக நிரம்பி வழியில் காவிரிக்குச் சென்ற ஜெயேந்திரர் முககொம்பில் புனித நீராடினார். பின்னர் அங்கிருந்து குணசீலம் கோவிலுக்குச்சென்றார்.அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கோவிலில் சாமி கும்பிட்ட ஜெயேந்திரரைக் காண ஏராளமானபொது மக்கள் கூடியிருந்தனர்.
பின்னர் அவர்களுக்கு ஆசி வழங்கிய ஜெயேந்திரர், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.
சங்கரராமன் கொலை வழக்குக்குப் பின் அவர் கோவில்களுக்குச் சென்றால், கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்பதைத் தவிர்த்துவந்தனர். ஆனால், குணசீலத்தில் அவருக்கு கோவிலின் சார்பில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, November 14, 2005, 5:30 [IST]