57 வயதில் பணி நிரந்தம்: தமிழக மின் வாரியம் சாதனை
திருச்சி:
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த ஒருவருக்கு அவரது 57வது வயதில் இப்போது தான்பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின் வாரியத்தில் சுமார் 22,000 பேர் கடந்த 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குகாண்ட்ராக்ட் ஊதியம் வழங்கப்படுகிறது, அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் வேறு சலுகைகளும் இவர்களுக்குக் கிடையாது.தங்களது பணியை நிரந்தரமாக்கக் கோரி இவர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி வருகின்றனர். இந் நிலையில் பணி மூப்புஅடிப்படையில் 2,500 பேரை மட்டும் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதில் திருச்சி மாவட்டத்தில் 150 ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் ரத்தினம். இவர்தோகமலையைச் சேர்ந்த இவருக்கு வயது 57. பணிக் காலம் முடிய 1 வருடமே இருக்கும் நிலையில் இவரது பணிநிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
அதே போல மணப்பாறையைச் சேர்ந்த 50 வயதான வள்ளிமுத்து என்பவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ரத்தினத்துக்கு பணி நிரந்தம் கிடைத்தாலும் ஓய்வூதியம் கிடைக்காது என்று தெரிகிறது.