For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவிக்கு மூக்குப்பொடி பழக்கம்: விவாகரத்து கோரும் கணவர்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தனது மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருப்பதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்என்று கோரி அவரது கணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளி ஒருவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

இவர்களுக்குத் திருமணமாகி 4 வயது மகன் உள்ளான். இவரது மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உண்டு. இதைநிறுத்தச் சொல்லி திருமணமான நாளில் இருந்தே அவரது கணவர் வலியுறுத்தி வந்தாராம்.

இதை அவரது மனைவி கேட்கவில்லை. இதையடுத்து சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வழங்கக் கோரிகணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை பேசி சுமூகமாகத் தீர்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதால், அவர்களது நலனைக் கருத்தில் கொண்டுஇருவரது பெயர்களையும் நாம் மறைத்துள்ளோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X