நாதஸ்வர வித்வான் செல்வரத்னம் பிள்ளை காலமானார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாதஸ்வர இசைக் கலையில் புகழ் பெற்ற வித்வான் ஏ.வி. செல்வரத்னம் பிள்ளை மரணமடைந்தார்.
திருவாரூர் மாவட்டம் ஆண்டான் கோவில் கிராமத்தை சேர்ந்த செல்வரத்னம் பிள்ளை உடல்நலக் குறைவால்பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 71.
இசைப் பரம்பரையில் வந்த செல்வரத்தினத்துக்கு அவரது தந்தை வீராசாமி பிள்ளை நாதஸ்வரம் கற்றுத் தந்தார். அதன் பிறகுஇவர் தமது 7 வயது முதலே நாதஸ்வர கச்சேரி செய்யத் தொடங்கினார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதை வென்ற இவருக்கு ஒரு மகன் உள்ளார்.












Click it and Unblock the Notifications