விழுப்புரத்தில் தங்கப் போகும் ஜெயேந்திரர்
விழுப்புரம்:
சங்கரராமன் கொலை வழக்கு புதுவை மாநிலத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதற்குவசதியாக விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் தங்கியிருக்க ஜெயேந்திரர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக அந்த மடத்தை புதுப்பிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.விழுப்புரத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த தெருவில் கட்டப்பட்டுள்ள சங்கர மடம் பழமையடைந்து கிடந்தது.இந் நிலையில் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இம் மாத இறுதியில் ஆரம்பாக உள்ளது. இதனால் அடிக்கடிபாண்டிச்சேரிக்ச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோருடன் வரும் சுமார் 50 பேருக்கு உணவு சமைக்க தனி சமையல் அறை அமைக்கும் பணியும்துவங்கியுள்ளது. இங்கு அவர் அன்றாடம் பூஜை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் சங்கர மட நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
இம்மாதம் 22ம் தேதி முதல் விழுப்புரத்தில் தங்கியிருக்க ஜெயேந்திரர் முடிவு செய்துள்ளார். சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் நடைபெறும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்காக சென்னை செல்லும் ஜெயேந்திரர்மீண்டும் விழுப்புரம் திரும்பிவிடுவார் என்று சங்கர மட வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications