சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த விவகாரம் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால் மற்றும் சி.கே.தக்கார் ஆகியோர் அடங்கிய பென்ச்முன்னிலையில் வந்த போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமத்திற்கான விளக்கத்தைஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர்.மேலும் சென்னை உயர்நீதிமன்ற உயர்மட்ட நீதிமன்றக் குழுவினர் நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்து கடிதம் அனுப்பிஇரண்டரை மாதங்கள் ஆன பிறகும், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணம் தெரியவேண்டும் என்று தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகள் நீதிபதிகள் இல்லாததால் நிலுவையில் உள்ளன. அங்கு மொத்தம் 49 நீதிபதிகள்தான் உள்ளனர். அபக்ஸ் நீதிமன்றம் 17 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இருந்தாலும் மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை ஒரு வார காலத்திற்குள்அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற 25ம் தேதிக்குஒத்திவைத்தனர்.