இன்று கலவை திரும்பும் ஜெயேந்திரர், விஜயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
ஆற்காடு:
காஞ்சி சங்கராச்சாரியார்கள் இன்று திருப்பதியில் இருந்து புறப்பட்டு கலவை சங்கரமடத்திற்கு வருகிறார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி தொடங்கியசாதுர் மாஸ்ய வியாஸ பூஜையை ஒரே இடத்தில் தங்கியிருந்து செய்வதற்காக திருப்பதிக்கு சென்றனர்.இருவரும் சுமார் 5 மாதங்கள் திருப்பதியில் தங்கியிருந்து சந்திரமவுலீஸ்வர பூஜைகள் செய்து வந்தனர்.
இதற்காக திருப்பதியில் உள்ள சங்கர மடத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு இரவு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள சங்கர மடத்திற்கு வருகின்றனர்.
கலவை மடத்தில் 2 நாட்கள் தங்கி பூஜைகளை முடித்துவிட்டு 22ம் தேதி செவ்வாய்கிழமை இரவு விழுப்புரம் சங்கரமடம் சென்றுஅங்கு தங்கியிருந்து சந்திரமவுலீஸ்வர பூஜைகளை செய்கின்றனர்.
மேற்படி தகவலை சங்கரமட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications