சிறுமியை கற்பழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கோவை:
சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓராண்டுக்கு முன்பு, துடியலூர் அருகேயுள்ள நடுநிலைப் பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை அதேபள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் தனது அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்து விட்டார்.
இது தொடர்பாக அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி கலாவதி சிறுமியை கற்பழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.












Click it and Unblock the Notifications