15 மாவட்டங்களில் வெள்ள அபாயம்: வீடுகளுக்குள் தண்ணீர்- இதுவரை 70 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் கன மழை காரணமாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ள அபாயம்ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்படட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டாலும் கலையாமல் மன்னார் வளைகுடாவில்தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தின் தென் பகுதி ஆகியவை முழுவதுமே கருமேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன.

தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. இந்த வானிலை தொடரும் சூழல் இருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Trichy
இந்த கன மழை காரணமாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நாகப்பட்டிணம், ராமநாதபுரம், கரூர், கடலூர், திருவாரூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகளுக்குள்தண்ணீர் புகுந்துள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிராமப் பகுதிகளில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் உடைந்துநூற்றுக்கண்ககான கிராமங்கள் தண்ணீரில் தீவு போல மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துயரத்தை சந்தித்துவருகின்றனர்.

இந்த மக்கள் சமூகக் கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, மருந்துகள், குடிநீர்வழங்கப்பட்டு வருகிறது.

Chennai Outskirts
வெள்ள அபாயம் காரணமாக 15 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சென்னைப்பல்கலைக்கழகத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் கடலூர் மாவட்டம் தொழுதூரில் 170மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம்,மணிமுத்தாறு, சேர்வலாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆபத்தைதவிர்க்க சில அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது.

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து உபரி நீர் ஊருக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.

Pondicherry
அமராவதி அணையிலிருந்து விநாடிக்கு 96,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைகளிலிருந்து பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி தொப்பூரை அடுத்த செக்கதரப்பட்டியில் தொப்பையாறு அனண அமைந்துள்ளது. இந்த அணை 6 ஆண்டுகளுக்கு பிறகுமுழக் கொள்ளவான 50 அடியை எட்டியது. இதனால் அங்கு 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. எனவே அங்கு 23கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Water released from poondi lake
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி நீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் சாலைகளில்பெருக்கெடுத்து ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரி 2வது நாளாக இன்றும் திறக்கப்படுகிறது. சைதாப்பேட்டையில் கூவம் ஆற்றைஒட்டிய பகுதிகள் நீரில் மூழ்கின.

கிண்டி-சைதாப்பேட்டையை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தமிழகத்தில் மழை வெள்ளம் ஆகியவற்றில் சிக்கிஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

நெய்வேலியில் நிலக்கரி சுரங்களில் நீர் புகுந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+