ரயில் பாதை சீரமைப்பு: ஆனால் இன்றும் 5 ரயில்கள் ரத்து
சென்னை:
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் 5 ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயல் சின்னம் காரணமாக சமீபத்தில் பலத்த மழை பெய்து தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருச்சிஅருகே காட்டாற்று வெள்ளத்தில் 250 மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது.இதனால் சென்னை-எழும்பூர்-விழுப்புரம்-திருச்சி-மதுரை பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாகதென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. திருச்சி அருகேதண்டவாளம் சரி செய்யப்பட்டதால், நேற்று மாலை முதல் தென் மாவட்டங்களிலிருந்து செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டன.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் முதல் ரயிலாக கிளம்பி சென்றது. அதை தொடர்ந்து குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ்இயக்கப்பட்டது. ஆனால் இந்த ரயில் தொழில் நுட்ப காரணங்களால் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காட்டூர்-புள்ளம்பாடியிடையே ரயில் தண்டவாளங்கள் இன்னும் சீரமைக்கப்படததால் விருத்தாசலம், விழுப்புரம் வழியாகஇயக்கப்படும் ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னைஎழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை சிறப்பு ரயில், தென்காசி-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய 5ரயில்கள் நேற்றும் ரத்து செய்யப்பட்டன. இன்று முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.
இன்று ரத்தாகும் ரயில்கள்:
இந்நிலையில் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ராமேஸ்வரம்சேது எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகூர் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆகிய 5 ரயில்கள் இன்றும்(திங்கட்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதியில் ரத்தாகும் ரயில்:
தாம்பரம்-மயிலாடுதுறை சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் விழப்புரம்-மயிலாடுதுறைக்கு இடையில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications