For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கராத்தே: தனியாகவே திரும்பி வந்த தனிப்படை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜனைப் பிடிக்கப் போன தனிப்படைகளில் ஒரு படை அவர் சிக்காததால் தனியாகவேதிரும்பி வந்துவிட்டது.

மேலிடத்துடன் கொடுக்க-வாங்கலில் பிரச்சனையானதையடுத்து உள்ளே போக இருந்த கராத்தே தடாலடியாக கடந்த செப்டம்பர்29ம் தேதி எஸ்கேப் ஆனார். அவர் மீது உரிய முறையில் வழக்குப் பதிவு செய்யாமலேயே அவரைப் பிடிக்க 5 தனிப்படைகள்அமைக்கப்பட்டன.

பின்னர் தான் ஒப்புக்கு சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட

இந்தப் படைகள் டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹரியாணா, கோவா என பிரிந்து சல்லடை போட்டுத் தேடி வருகின்றன.

ஆனால், அவர் அந்தப் படையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அடிக்கடி டிவி கேமராக்கள் முன் திக் தரிசனம் தந்துவருகிறார். எங்கிருந்தாவது செல்போனில் நிருபர்களுடன் பேசுகிறார். மாநகராட்சி ஆணையர் விஜய்குமாருக்கு லெட்டர்போடுகிறார்.

மொத்தத்தில் அரசுக்கு பெரும் மண்டைக் குடைச்சல் தந்து கொண்டிருக்கிறார்.

கராத்தேவைப் பிடிக்காமல் ஊருக்கு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்ததால் இந்தப் படையினர் நொந்து போய் அந்தஊர்களில் அல்லல்பட்டு வருகின்றனர்.

இப்போது அதில் ஒரு படை திரும்பி சென்னைக்கே வந்துவிட்டது. மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷ்னர் அன்புமொழி,இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எழும்பூர் உதவி கமிஷ்னர் முரளி ஆகியோரைக் கொண்ட குழு ஊருக்குத் திரும்பிவிட்டது.

வந்ததும் வராததுமாக இந்தப் படையினர் கராத்தேவின் நண்பர் பாண்டியன், அவரது மனைவி கவிதா ஆகியோரை அழைத்துவிசாரித்தனர். இதையடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கவிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X