திருச்சியில் மீண்டும் வெள்ள அபாயம் எச்சரிக்கை
திருச்சி:
புதிதாக உருவாகியுள்ள புயல் சின்னத்தால் பெய்யப் போகும் மழையால் திருச்சி நகருக்கும் மாவட்டத்துக்கும் வெள்ள அபாயம்ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகிஷோர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருச்சி மாவட்டத்தின் பல ஆறுகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. இந் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ளகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் பச்சமலை ஆறு, பொன்னணியாறு, அய்யாறு, அரியாறு, கோரையாறு மற்றும் உய்யங்கொண்டான் ஆறு ஆகியவற்றில்வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த ஆறுகளின் நீர் காவிரியில் கலக்கையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருச்சி மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புக வாய்ப்புள்ளது. இதனால் வெள்ளம் சூழும் பகுதிகளில் வசிக்கும் மக்கள்பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
அவர்களை இடம் பெயரச் செய்யவும், தேவையான உதவிகளை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் முழு ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. இந்தப் பணிகளில் நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications