தேசிய பேரிடர் மீட்பு படை அமைப்பு: சென்னை, அரக்கோணத்தில் முகாம்
டெல்லி:
நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் சம்பவங்கள் நடக்கும் போது அதைச் சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப்படையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் ரகுபதி கூறியதாவது:அணு, உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதல்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் நடக்கும் போது, அதைச் சமாளிக்க மத்தியதுணை ராணுவப் படையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. சிறப்புப் பயிற்சி பெற்ற இந்தப் படையில் எட்டு படை பிரிவுகள்உள்ளன.
மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்திய-திபெத் எல்லைப் படை, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் ரிசர்வ் போலீஸ் படைபோன்ற பிரிவுகளில் இருந்து தலா இரண்டு படை பிரிவுகள் பிரிக்கப்பட்டு, புதிதாக அமக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையில் இடம் பெற்றுள்ளன.
இந்த 8 படைகளும் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் அரக்கோணம் ஆகியவற்றுக்குஅருகில் தயார் நிலையில் வைக்கப்படும்.
இதன் மூலம் அவசியம் ஏற்படும்போது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்தப் படைகளை விரைவாகவும், எளிதாகவும்அனுப்பி வைக்க முடியும் என்று கூறினார்.