சென்னை, வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் நேற்றிரவு கடல் சீற்றம் மிக அதிகமாக இருந்தது. கடல் சுமார் 100 மீட்டர் அளவுக்கு வெளிவாங்கியதால் மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக பெரும் அச்சம் பரவியது.புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடகடலோரப் பகுதிகள் அனைத்திலும் 5ம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் மெரீனா கடற்கரையில் கடல் அலைகள் கரையைத் தாண்டிக் கொண்டு 100 மீட்டர் வரை தாவி வந்தன. இதனால்கடற்கரையில் இருந்தவர்கள் அலறிக் கொண்டு ஓடினர். மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக அச்சம் பரவியது. இன்றும் கடலில்சீற்றம் அதிகமாகவே உள்ளது.
இதற்கிடையே நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யத்திலும் கடலில் கொந்தளிப்பு மிக அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications