For Quick Alerts
For Daily Alerts
Just In
அரபிக்கடல் நோக்கி நகர்ந்தது புயல்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை
சென்னை:
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலை நோக்கி நகர்ந்தது.
சென்னைக்கு அருகே வங்கக்கடலில் வலுவிழந்த நிலையில் இருந்த புயல் சின்னம் மேக கூட்டங்களாக மாறி அரபிக்கடலைநோக்கி நகர்ந்தது. இதனால் தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்.இதற்கிடையே சென்னைக்கு கிழக்கே 2,000 கி மீ தொலைவில் வங்காள விரிகுடா கடலில் அந்தமான் அரகே புதிய புயல் சின்னம்உருவாகியுள்ளது. இதை வானிலை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இது குறித்து சென்னை வானிலை நிலைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
சென்னைக்கு கிழக்கே 2,000 கிலோமீட்டர் தொலைவில் மேக கூட்டங்கள் தென்படுகிறது. அது புயல் சின்னமாக மாறுமா என்பதைஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார்.
Comments
Story first published: Sunday, December 4, 2005, 5:30 [IST]