ஐயோ...: அந்தமான் அருகே மீண்டும் ஒரு புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் தமிழ்நாட்டிலிருந்து அந்தமான் அருகே நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.கடந்த 25ம் தேதி ஒரு குறைந்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே உருவாகி சென்னைக்கு அருகே 400 கிமீ தொலைவில் வந்தபோதுபுயல் சின்னமாக வலுப்பெற்றது. அது வலுவிழந்து 4 நாட்களாக ஒரே இடத்தில் நிலை கொண்டதால் கடந்த 2 நாட்களாகசென்னையில் மழை கொட்டி தீர்த்தது.
தற்போது மீண்டும் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து சுமார் 2,000 கி.மீ தூரத்தில்இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்தால் மீண்டும் ஒரு புயல் அபாயம் ஏற்படும். ஒருவேளை இப்போது இருக்கும் இடத்திலேயே அது வலுவிழந்து போகவும் வாய்ப்புள்ளது. புயலின் போக்கை படிப்படியாகத்தான்கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வு மைய வட்டாரம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications