அப்பாடா...ஒரு வழியாய் தொடங்கிய கிரிக்கெட்
சென்னை:
இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஒரு வழியாக இன்று பிற்பகலில் தொடங்கியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டிய இந்தப் போட்டி கன மழை, வெள்ளம்காரணமாக ஒவ்வொரு நாள் ஆட்டமாக ரத்து செய்யப்பட்டு வந்தது. இந் நிலையில் நேற்று முதல் மழை நின்ற காரணத்தால், இன்றுகாலையில் மைதானம் ஓரளவுக்குக் காய்ந்த நிலையில் இன்று (4ம் நாள்) போட்டி தொடங்கியது.முதல் 3 நாட்கள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்றும் நாளையும் மட்டுமே போட்டி நடக்கும் (அதுவும் கூடநாளை மழை பெய்யாவிட்டால). ஒன்றரை நாள் மட்டுமே நடக்கப் போகும் இந்த டெஸட் போட்டியில் வெற்றி, தோல்வியைநிர்ணயிப்பது சிரமம் என்பதால் பெரும்பாலும் போட்டி டிரா ஆகும் என்றே தெரிகிறது.
அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு:
சென்னை அண்ணாபல்கலைகழகம் நாளை நடத்த திட்டமிட்டிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. டிசம்பர் 5,6,7ம் தேதிகளில்நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் கன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், ஏற்கனவே மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதேர்வுகள் வரும் 26ம் தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பஸ் கட்டணம் உயர்வு:
கன மழை காரணமாக சாலைகள சேதமுற்றுள்ளதைச் சுட்டிக் காட்டியும், நெடுந்தூரம் சுற்றிக் கொண்டு போக இருப்பதாகக் கூறியும்தமிழகம் முழுவதும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை சகட்டுமேனிக்கு உயர்த்தி வருகின்றனர். குறிப்பாகதிருச்சி-தஞ்சை பகுதியில் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட 2 மடங்காகிவிட்டது.












Click it and Unblock the Notifications