ரஷ்யாவில் மன்மோகன்: ஆயுத இறக்குமதி குறித்து பேச்சு
மாஸ்கோ:
அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மிகப் பெரிய அளவில் ஆயுத இறக்குமதி செய்யப் போவதாக பிரதமர்மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ரஷ்யா சென்றுள்ள மன்மோகன் சிங், அந் நாட்டு அரசு செய்தி நிறுவனமான இடார்-டாஸ் செய்தியமைப்புக்கு அளித்த பேட்டியில்,இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டாக விண்வெளி ஆய்வுகளைத் தொடங்கியுள்ளோம். அணு சக்தியை அமைதியானபணிகளுக்குப் பயன்படுத்துவதில் இரு நாடுகளும் பல திட்டங்களை அமலாக்கி வருகிறோம்.
விரைவில் எங்களது படைகளை முழு அளவில் நவீனப்படுத்த இருக்கிறோம். இதற்காக ரஷ்யாவிடம் இருந்து மிகப் பெரியஅளவில் ஆயுத இறக்குமதி செய்யப் போகிறது இந்தியா.
தீவிரவாதிகள் விஷயத்தில் ரஷ்யா-இந்தியா-சீனா ஆகிய நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகள் பொதுவாக ஒரே மாதிரியானவைதான். அதை எதிர்க்க கூட்டாக செயல்படுவது குறித்து விவாதித்து வருகிறோம்.
இந்தியாவின் மிகப் பெரிய நண்பர் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின். இந்தியாவுக்கு கடுமையான பிரச்சனைகள்வந்தபோதெல்லாம் கை கொடுத்த நாடு ரஷ்யா, அதை இந்தியா என்றும் மறக்காது என்றார்.












Click it and Unblock the Notifications