பாஜகவில் இருந்து உமாபாரதி டிஸ்மிஸ்: புதுக்கட்சி தொடங்க முடிவு
டெல்லி:
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக உறுப்பினருமான உமாபாரதி பாரதிய ஜனதா கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.இதை தொடர்ந்து அவர் புதிய கட்சியை தொடங்கவுள்ளார்.
பாஜகவின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தவர் உமாபாரதி. இவரது தீவிர பிரசாரத்தினால் தான் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாஆட்சியை பிடித்தது. ஹூப்ளி வழக்கில் பதவி இழந்த அவர் பாபுலால் கவுருக்கு பதிலாக மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்கவிரும்பினார்.இதை ஏற்காத பாஜக மேலிடம் சிவராஜ்சிங் சவுகானை முதலமைச்சராக அறிவித்தது. அதில் அதிருப்தி அடைந்த உமாபாரதி புதியமுதலமைச்சர் தேர்வு கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போபாலில் இருந்து அயோத்தி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த கட்சி மேலிடம் உமாபாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, டிஸ்மிஸ்செய்தது. மேலும் அவருக்கு ஆதரவு அளித்த 13 எம்எல்ஏக்கள் மீதும் பாஜக நடவடிக்கை எடுக்க உள்ளது.
கட்சியில் இருந்து தன்னை நீக்கியதால் உமா பாரதி அதிருப்தி அடைந்துள்ளார். தனது ஆதரவாளர்களின் நலனை மனதில்கொண்டு புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து தனக்கு ஆதரவு அளிக்கும் மூத்த தலைவர்களிடம் அவர்ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
இது குறித்து உமாபாரதி கூறியதாவது:
நான் விரையில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராம்நாயக்கை சந்தித்து பேசுவேன். அப்போது என்னை டிஸ்மிஸ் செய்ததுசெல்லாது என்று அறிவிக்கும் படி வற்புறுத்துவேன். கட்சியில் தலைவரை விட ஒழுங்கு கமிட்டியே மேலானது.
ஜின்னாவுக்கு புகழாரம் சூட்டியதன் மூலம் கட்சிக் கட்டுப்பாட்டை அத்வானி மீறியுள்ளார், அவர் மீது நடவடிக்கை எடுக்கவற்புறுத்துவேன். என் பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். நான் ஏன் கட்சியை விட்டு விலக வேண்டும். எனதுகோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் புதுக்கட்சி தொடங்குவேன் என்று கூறினார்