மழை நீரில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை முகப்பேர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டதால் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாகஇறந்தனர்.

சென்னை நகரில் தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அப்படிப்பட்டபகுதியில் ஒன்று தான் முகப்பேர். இங்கு இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

இந்த நிலையில் முகப்பேர் பன்னீர் நகர் 60 அடி சாலையில், பெருமாள் (வயது 71) என்பவர் தனது பேத்தி சண்முகப்பிரியாவை (4 வயது) தூக்கிக் கொண்டு நடந்து சென்றார். அப்போது தண்ணீரில் கிடந்த மின்சார வயரிலிருந்து மின்சாரம் கசிந்துகொண்டுள்ளது.

இது தெரியாமல் தண்ணீரில் பெருமாள் கால் வைத்தபோது அவரும், சண்முகப்பிரியாவும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாகஇருவரும் பிணமானார்கள். இவர்களைக் காப்பாற்றுவதற்காக கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் முயன்றுள்ளார்.அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சாரம் பாயந்து 3 பேர் பரிதாபமாக இறந்தது முகப்பேரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+