அப்புவின் ஜாமீன் மனு 4வது முறையாக தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான கூலிப் படைத் தலைவன் அப்புவின் ஜாமீன் மனு 4வதுமுறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூலிப் படைத் தலைவன் அப்பு தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரிஅப்பு 3 முறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மூன்று முறையும் மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன.

இந்த நிலையில் 4வது முறையாக உயர்நீதிமன்றத்தில் அப்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு இருதய நோய்இருப்பதாகவும், சிறையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லை. மேலும், தனது தாயார் உடல் நலக்குறைவுடன் இருப்பதால்அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்கையில், அப்புவுக்கு சிறையில், நல்ல மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதாகதெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சர்தார் சக்காரியா உசேன், அப்புவின் மனுவைத் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+