வேன்-லாரி மோதல்: 30 பெண்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த மகளிர் சுய உதவிக் குழுவைச்சேர்ந்த 30 பெண்கள் படுகாயமடைந்தனர்.எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்காக தொப்பூரில் நடந்த மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டுவிட்டு இவர்கள் வேனில் தர்மபுரிதிரும்பிக் கொண்டிருந்தனர். மாவட்ட நிர்வாகமே அவர்களுக்கு வேன் பிடித்துத் தந்திருந்தது.
தர்மபுரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் இந்த வேன் மோதியது. இதில் அதிலிருந்த 30 பெண்களும்படுகாயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications