த ரைசிங் சன்: திமுகவின் புதிய பத்திரிக்கை
சென்னை:
திமுகவின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழான முரசொலியைப் போல, அதிகாரப்பூர்வ வார ஏடாக தி ரைசிங் சன் என்றபத்திரிக்கையை அக் கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று சென்னையில் வெளியிட்டார்.
முரசொலி மாறனால் ஆரம்பிக்கப்பட்டது முரசொலி நாளிதழ். இது திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக உள்ளது. திமுகவின்தமிழ்ப் பிரச்சார பீரங்கியாக திகழும் முரசொலியைப் போல ஆங்கிலத்திலும் ஒரு வார இதழை கொண்டு வர முரசொலி மாறன்முடிவு செய்து தி ரைசிங் சன் என்ற பெயரில் ஆங்கில வார ஏட்டை முன்பு ஆரம்பித்தார்.ஆனால் அது சரியான வரவேற்பு இல்லாததால் பின்னர் நிறுத்தப்பட்டு விட்டது.
இந் நிலையில் த ரை சிங் சன் வார இதழை மீண்டும் கொண்டு வந்துள்ளது திமுக.
இதன் தொடக்க விழா இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கருணாநிதி கலந்து கொண்டு ரைசிங் சன் வார இதழின் முதல்பிரதியை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுகவின் நிகழ்வுகளை, கருத்துக்களை வெளி மாநிலங்களில் இருப்போரிடம் கொண்டு சேர்க்கும் பணியை ரைசிங்சன் மேற்கொள்ளும் என்று கருணாநிதி அப்போது தெரிவித்தார்.
இந்தப் பத்திரிக்கைக்கு தலா 100 சந்தாக்களைப் பிடித்துத் தர வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச்செயலாளர்கள், முக்கியஸ்தர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். சில ஆண்டுகளுக்கான இந்தச் சந்தாவின் மதிப்பு ரூ. 7,500.இதனால் கழக உடன்பிறப்புக்கள் கையைப் பிசைந்தபடி முழித்துக் கொண்டிருக்கின்றனர்.