தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புயல் விலகினாலும் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் 4வதாக உருவான பனூஸ் புயல் கடந்த ஒருவாரமாக ஆட்டம் காட்டி ஒருவழியாக வேதாரண்யம் அருகேகரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் புயல் ஆபத்து நீங்கினாலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலைமையம் அறிவித்துள்ளது.
இதனால் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால்மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இரவில் லேசாக மழை தூறும். காலையில் மேக மூட்டத்துடன் வானம் காணப்படும். அவ்வப்போது லேசான மழைபெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications