சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அரசு நிலம் அடிமாட்டு விலைக்கு விற்பனை: ரூ. 100 கோடி லஞ்ச!!
சென்னை:
சென்னையில் ரூ. 200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வெறும் ரூ. 15 கோடிக்குவிற்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 100 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளது என திமுக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் சுர்ஜித் சிங்கிடம் அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அக் கட்சியினர் பர்னாலாவை சந்தித்தனர்.
அப்போது முதலமைச்சர் மழை, வெள்ள நிவாரண நிதிக்கு, ரூ. 25 லட்சம் தொகையை ஆளுனரிடம் அவர்கள் கொடுத்தனர்.வழக்கமாக இந்த நிதி முதல்வரிடம் தான் தரப்படும். சுனாமி நிவாரண நிதியைக் கூட முதல்வரிடம் தான் ஸ்டாலின் மூலமாக திமுககொடுத்தது.
ஆனால், வெள்ள நிவாரண நிதியை கொடுக்கப் போன மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமைச் செயலகத்தில்அலைகழிக்கப்பட்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் யாரும் முதல்வரை சந்தித்து நிவாரண நிதி தரவில்லை.
இந் நிலையில் பர்னாலாவிடம் நிதியையும் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் திமுக தலைவர்கள் வழங்கினர்.
அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெய்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர்பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆளுனரிடம் அன்பழகன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், சென்னை அருகே உள்ள சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரூ. 200 கோடிமதிப்புள்ள அரசு நிலம் வெறும் ரூ. 15 கோடிக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் பன்னாட்டுநிறுவனத்திற்கு அரசு விற்றுள்ளது.
இந்த அடிமாட்டு விலைக்காக ரூ. 50 முதல் 100 கோடி வரை பேரம் நடந்து கமிஷன் கை மாறியுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 100கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications