போலி எப்.ஐ.ஆர்: சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு
சென்னை:
தமிழகத்தை உலுக்கி வரும் போலி எப்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பொது நலவழக்கு தொடரப்பட்டுள்ளது.
போலி எப்.ஐ.ஆர் விவகாரம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. போலி எப்.ஐ.ஆரைப் பயன்படுத்தி போலீசார் காசு சம்பாதித்ததுஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் போலீஸ் உதவியுடன் போலி எப்ஐஆர்களைத் தாக்கல் செய்து வண்டிகள் காணாமல்போய்விட்டதாக பொய்த் தகவல் தந்து இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் பலர் ஏமாற்றியுள்ளனர்.இந் நிலையில், ரவி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி பொது நல வழக்கு போட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், போலி எப்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இதுவரை சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ஆனால் அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கூடபோலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
பல காவல் நிலையங்களில் இன்னும் கூட போலி எப்.ஐ.ஆர். புத்தகங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. முற்றிலும் தமிழககாவல்துறை சம்பந்தப்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை தமிழக காவல்துறையினரே விசாரித்தால் அதில் நியாயம் கிடைக்காது.
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை டிஜிபி மெத்தனமாக செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீதும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
எனவே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உளவுப் பிரிவினர் காவல் நிலையங்களில் அதிரடியாக சோதனை நடத்திவிட்டு, போலீசுக்கு போலி எப்ஐஆர்அச்சடித்துத் தந்த சேகர் என்பவனைக் கைது செய்தததோடு அப்படியே நின்றுவிட்டனர்.
போலி எப்ஐஆரைப் பயன்படுத்தி காசு தேத்திய போலீசார் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில்உண்மையிலேயே நேர்மையான விசாரணை நடத்தினால் சுமார் 100 காவல் நிலையங்களின் எஸ்ஐகளில் ஆரம்பித்து ஏட்டு,போலீஸ் வரை நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
ஆனால், காக்கிகள் துணையோடு அரசாங்கம் நடத்தும் இந்த அரசு அந்த நடவடிக்கையை எடுக்குமா என்பது சந்தேகமே.












Click it and Unblock the Notifications