For Quick Alerts
For Daily Alerts
Just In
3 எஸ்.பிக்கள் திடீர் மாற்றம்: குமரி எஸ்பிக்கு பதவியில்லை
சென்னை:
வேலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் சிறிய அளவிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வேலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டகண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
வேலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இதுவரை பணியாற்றி வந்த ராஜசேகரன் கன்னியாகுமரி மாவட்டகண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியான ராமசுப்ரமணியன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கண்காணிப்பாளராக, சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் அவி பிரகாஷ்நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Tuesday, December 13, 2005, 5:30 [IST]