For Quick Alerts
For Daily Alerts
Just In
புதிய புயல் வலுவிழந்தது: மழை தொடரும்
சென்னை:
தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து விட்டதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட 7 புயல் சின்னங்கள் உருவாகி தமிழகம் முழுவதையும் வெள்ளக்காடாக்கியுள்ளது. இதில் ஒரு புயல் சின்னம் புயலாக மாறி, வேதாரண்யம் அருகே சமீபத்தில் கரையைக் கடந்தது. மற்ற புயல்சின்னங்கள் ஆந்திராவுக்கு சென்று விட்டன.
இந் நிலையில் 8வது புயல் சின்னம் தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் நேற்றுஅறிவித்தது. இந்தப் புயல் சின்னம் எந்த திசையில் செல்லும் என்பது குறித்து உறுதியாகத் தெரியாத நிலை இருந்தது.
இந் நிலையில் புதிய புயல் சின்னம் வலுவிழந்து விட்டதாக இன்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் வலுவிழந்து விட்டாலும் கூட தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை மற்றும் இடியுடன் கூடிய மழைபெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, December 13, 2005, 5:30 [IST]