For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபை: போலி விசா தயாரித்த இந்தியர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

துபாயில் போலி பாஸ்போஸ்ட், போலி விசா தயாரித்து விற்று வந்த 9 இந்தியர்கள், இரு இலங்கைப் பெண் மற்றும் ஒருபாகிஸ்தான் நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் துபாயின் அல் பரஹா பகுதியில் அபார்ட்மெண்ட்டில் நடத்திய அதிரடி சோதனையில்இவர்கள் சிக்கினர்.

பல ஆயிரம் ரூபாய்களை வாங்கிக் கொண்டு இவர்கள் போலி விசா தயாரித்து விற்று வந்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்டசோதனையில் போலி பள்ளிச் சான்றிதழ்கள், பல்கலைக்கழக சான்றிதழ்கள், இந்திய பாஸ்போர்ட்டுகள் ஆகியவையும் பிடிபட்டன.

ஷார்ஜாவைச் சேர்ந்த ஒருவர் தனது சகோதரருக்கு வேலைக்கான விசா பெற இந்தக் கும்பலிடம் ரூ. 40,000 கொடுத்துஏமாந்துள்ளார். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். அவர் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சோதனைநடத்தியபோது இந்தக் கும்பல் பிடிபட்டது.

கம்ப்யூட்டர்கள் உதவியுடன் இவர்கள் இவற்றை வடிவமைத்துத் தயாரித்து வந்துள்ளனர். இப்போது இவர்களால்ஏமாற்றப்பட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X