For Daily Alerts
Just In
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை:
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வங்ககடலில் நிலை கொண்டிந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்துள்ளது.
தற்போது வங்ககடலில் நிலை கொண்டிருந்த லேசான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவிழந்துவிட்டது. இருப்பினும்அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்யக் கூடும்என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Comments
Story first published: Wednesday, December 14, 2005, 5:30 [IST]