சென்னை சைபர் கிரைம் போலீஸ் தீவிர விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்ட இ-மெயிலை அனுப்பியது யார் என்பது குறித்து சென்னை மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையிலிருந்து தான் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.இதையடுத்து அதுகுறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை மாநகர காவல்துறைக்குஅறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் தீவிர விசாரணைதொடங்கியுள்ளது.
அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், இ-மெயில் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள உதவி ஆணையர் பாலு, இன்டர்நெட் தொடர்பான குற்றச் செயல்களை புலனாய்வு செய்வதில்நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications