மாநகராட்சியை கூட்டச் சொல்லும் கராத்தே

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் உயிரிழந்தது தொடர்பாக விவாதிக்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என தலைமறைவாக உள்ளதுணை மேயர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயேந்திரரின் உதவியுடன் நேபாளத்தில் அந் நாட்டு மன்னரின் பாதுகாப்புடன் கராத்தே தியாகராஜன் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் கராத்தே இன்று அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்திற்கு முக்கியக் காரணம் மாநகராட்சிஆணையர் விஜயக்குமாரின் திறமையற்ற நிர்வாகமே.

அவரது குளறுபடியான நிர்வாகம் காரணமாகவே இந்த துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதுகுறித்து விவாதிக்க மன்றக் கூட்டத்தை வரும் திங்கள்கிழமை கூட்டவேண்டும் என்று கூறி ஆணையருக்கு கடிதம் எழுதவுள்ளேன்.

போலீஸாருக்குப் பயந்தே எனது தாயாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னால் வர முடியவில்லை. நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்பதைவெளியிட முடியாத நிலையில் உள்ளேன் என்றார் கராத்தே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+