ஆந்திராவில் சென்னை இளம் பெண் படுகொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள லாட்ஜில் சென்னை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.அவருடன் தங்கியிருந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

அந்திர மாநிலம் ரேணி குண்டா ரெயில்வே புக்கிங் சாலையில் பிரபல ரெட்டி ஓட்டல் என்ற லாட்ஜில் கடந்த 13ம் தேதி ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் கணவன்-மனைவி என்று கூறி அறை எடுத்து தங்கினார்கள்.

மறுநாள் காலை அறையிலிருந்து வாலிபர் மட்டும் அறைக் கதவை பூட்டி விட்டு வெளியில் சென்றார். அவர் திரும்பி வரவில்லை.அறை நீண்ட நேரமாக பூட்டி கிடந்ததால் லாட்ஜ் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் அறைக்கதவை உடைத்து பார்த்தார்.

அந்த அறையில் தங்கியிருந்த இளம் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ரேணி குண்டா போலீசார்சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த இளம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவர் கழுத்தை நெறித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும்அவர் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் தெரியவந்தது.

லாட்ஜில் வந்து தங்கிய போது அந்த வாலிபர் தனது பெயர் ராஜ் என்றும் அந்த பெண்ணின் பெயர் லதா என்றும் மோதியார் தெரு,கடம்பத்தூர், சென்னை-22 என்றும் தவறான முகவரி மற்றும் பெயர்களை குறிப்பிட்டிருந்ததால் இது திட்டமிட்ட கொலை என்பதுஉறுதியாகியது.

கொலை செய்யப்பட்ட பெண்ணும் அந்த வாலிபரும் கள்ளக்காதலர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவேரேணிகுண்டா போலீசார் கொலையுண்ட பெண்ணின் படம் மற்றும் தப்பி ஓடிய கொலைகாரனின் கம்ப்யூட்டர் வரைபடம்ஆகியவற்றை கொண்டு வந்து சென்னை நகர போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த 2 புகைப்படங்களும் சென்னை நகரின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+