ஏ.சி.சண்முகத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு
சென்னை:
கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கேட்ட மாணவரை மிரட்டிய வழக்கில் எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழக வேந்தர்ஏ.சி.சண்முகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து பல்வேறு கட்டடங்களைக் கட்டி வைத்துள்ள ஏ.சி.சண்முகம் இப்போதுபெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளப்பட்டுவருகின்றன.அரசு நிலத்தை ஆக்கிரமித்தது உள்ளிட்ட 3 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. பின்னர், கல்விக் கட்டணத்தைத்திருப்பிக் கேட்ட மாணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக சண்முகம், டீன் பவானி சங்கர், தனி அதிகாரியும்சண்முகத்தின் மனைவியுமான கலாவதி ஆகியோர் மீது புதிதாக ஒரு வழக்கை மதுரவாயல் போலீஸார் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்குமாறு சண்முகம் உள்ளிட்ட 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சர்தார் சக்காரியா உசேன், கல்விக் கட்டணத்தை வசூலித்து, வாங்கி அதை முழுமையாகப்பயன்படுத்தியவர் ஏ.சி.சண்முகம்தான். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது.
மற்ற இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பையடுத்து ஏ.சி.சண்முகத்தை கைது செய்யபோலீஸார் மீண்டும் மும்முரமாக இறங்கியுள்ளனர்.