திசை மாறிய மாலா: புயல் ஆபத்து நீங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த மாலா புயல், தற்போது வட கிழக்கு திசை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு ஏற்பட்ட புயல் ஆபத்து நீங்கி விட்டது.

வங்கக் கடலில் உருவான 9வது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான மாலா, புயலாக மாறி கடலூருக்கும், நாகைக்கும் இடையேநிலை கொண்டிருந்தது. இந்தப் புயல் படிப்படியாக நகர்ந்து கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையைக்கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புயல் இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந் நிலையில் இன்றபகாலை (செவ்வாய்க்கிழமை) நிலைமை மாறியது. தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கடலூருக்கு 300 கிலோ மீட்டர்தொலைவை எட்டிய பின் வட கிழக்கில் நகரத் தொடங்கியுள்ளது. இப்போது கடலூரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளதுபுயல் சின்னம்.

இந்தப் புயல் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகக் கடலோரப் பகுதிகளுக்குஏற்பட்டிருந்த புயல் ஆபத்து நீங்கி விட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த 24 மணிநிேரத்திற்கு கடலோர தமிழகத்தில் லேசான மற்றும் மிதமான மழை இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.

புயல் விலகிச் சென்று விட்டதால் கடலோர தமிழக மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+