இ-மெயில் மிரட்டல்: முக்கிய துப்பு கிடைத்தது

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நாடாளுமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்டது தொடர்பாக குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின்செல்போன் எண் கிடைத்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த இன்டர்நெட் மையத்திலிருந்துதான் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில்வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை மற்றும் முருகன்குறிச்சியில் உள்ள பிராட்பேண்ட் இன்டர்நெட் மையம், நிெல்லை ஆன்லைன்இன்டர்நெட் மையங்களைப் பூட்டி போலீஸார் சீல் வைத்தனர்.

இரு மையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் உள்பட 14 பேரை போலீஸார் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். ஆனால்அவர்கள் கொடுத்த தகவல்களில் துப்பு துலங்கவில்லை.

இந் நிலையில் டெல்லியிலிருந்து வந்த இரண்டு தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

அவர்களது விசாரணையிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்த 14 பேரும் தவறு செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 14 பேரில் 13 பேரை தற்போது விடுவித்து விட்டனர்.

அதேசமயம், மெயில் அனுப்பப்பட்ட நேரத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட் மையத்தில் இருந்தவர்கள் குறித்து அறிந்த ஒரே நபர்அந்த மையத்தின் உரிமையாளர் செல்வின் முத்துக்குமார் மட்டுமே என்பதால் அவரை மட்டும் இன்னும் விடுவிக்காமல் உள்ளனர்.

சம்பவ நாளன்று காலையில் மையத்திற்கு வந்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கம்ப்யூட்டர்உதவியுடன் பல்வேறு முகங்களை போலீஸார் வரைந்து அவரிடம் காட்டினர். அதில் குறிப்பிட்ட ஒரு நபரின் முகத்தைமுத்துக்குமார் அடையாளம் காட்டியுள்ளார்.

அதை வைத்து அந்த நபர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இப்போது அவரது செல்போன் எண்ணையும்போலீசார் ட்ரேஸ் செய்துவிட்டனர். அந்த நபர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தற்போது போலீஸார் புது வேகத்துடன்விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+