முகம்மது அலிக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் வரும் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 11 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பல கோடி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தமிழகத்தில் முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்குப் பின்னர் இந்த 3 பேர் உள்பட 11 பேர் மீது சிபிஐ நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.குற்றப் பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி, டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி.அதிகாரி சாது ராமசாமி, நிஜாமுதினீன் மனைவி நஸ்ரீன் ஆகிய நான்கு பேரும் ஜனவரி 12ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் நேரில்ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த நான்கு பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
இதேபோல, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்துல் கரீம் டெல்கி, நிஜாமுதீன், அப்துல் வாஹித், சர்பிராஸ் நவாஸ், ஜேக்கப்சாக்கோ, பாலாஜி, பீட்டர் ஆகிய 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications