திமுக கவுன்சிலர் மீது பொய் வழக்கு: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெள்ள நிவாரண முகாமில் வதந்திகளை பரப்பியதாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரணம் வாங்க வேண்டி திரண்டிருந்த கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 42 பேர்உயிரிழந்ததற்கு அரசின் குளறுபடிகளும், அவசர நடவடிக்கையே காரணம். ஆனால் யாரோ பரப்பிய வதந்தி தான் காரணம் என்றகற்பனையில் அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயலாகும்.

இந்த சம்பவத்துக்கு துளிகூட சம்பந்தமில்லாத திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டிருப்பதும் அவர் மீது வழக்குதொடர முயற்சி மேற்கொண்டிருப்பதும் வன்மையாக கண்டிக்கதக்கது.

கைது செய்யப்பட்டுள்ள திமுக கவுன்சிலரை உடனடியாக விடுதலை செய்து அவர் மீதான குற்றச்சாட்டு மற்றும் வழக்குகளை அரசுஉடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

நடந்து விட்ட உயிர்பலிக்கு காரணம் என்னவென்று நாடே அறியும். அனைத்து கட்சி குழுக்களை அமைத்து வெள்ள நிவாரணஉதவிகளை முறையாக வழங்க வேண்டும் என்று எதிர் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து, அரசியல் ஆதாயத்தோடுமுன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் அவசர கோலத்தில் நிவாரண உதவிகளை வழங்கிய அரசின் குளறுபடிகள் தான்அனைத்திற்கும் காரணம்.

நிர்வாக குளறுபடியால் தான் மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கு மேல் என்ன காரணம் என்பதை கண்டறியவிசாரணை கமிஷனையும் அரசு அமைத்திருக்கிறது. கமிஷன் அறிக்கை வருவதற்கு முன்பாகவே பொய் வழக்கு போடுவது, கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+